ஸர்வ சௌபாக்கியங்களும் அருளும் சாதனா
தீபாவளித் திருநாளில் ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் முழு அருள் இருப்பதால் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாக அமைந்து விட்டது. பல கஷ்டங்களைக் கொடுத்துக் கொண்டு இருந்த நரகாசுரனை கண்ணன் வதம் செய்து மக்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுத்த நாள் தீபாவளித் திருநாள்.
ஆனால் இந்த தீபாவளித் திருநாள் மிகவும் சக்தி வாய்ந்த தினமாக அமைந்ததற்கு மிக முக்கிய காரணம் இருக்கிறது. ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பிறந்த நாள் தீபாவளித் திருநாள் ஆகும். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலிலே அமிர்தத்திற்காக மேரு மலையை வைத்து கடைந்துக் கொண்டிருந்தார்கள். கார்த்திகை மாதம் அமாவாசை நன்நாளில் பாற்கடலில் இருந்து ஸ்ரீ லக்ஷ்மி தேவி ஸர்வசக்தி மயியாக வெளிவந்து, இந்த பிரபஞ்சத்தையே காக்கும் தொழில் கொண்ட ஸ்ரீமந் நாராயணனின் இதயத்தில் அமர்ந்தாள். அதனாலேயே பக்தர்கள் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நினைத்து ஆத்ம ரூபமாக பூஜை செய்தவுடன், கருணாமயியான அவள் ஸ்ரீமந் லக்ஷ்மி நாராயணனாக தோன்றி ஸகல சம்பத்துக்களையும் கொடுத்து காத்து இரட்சிக்கிறாள்.
தீபாவளித் திருநாள் தீப ஒளி நாளாகவும் கொண்டாடப்படுகிறது. தீபம் என்றாலே ஸ்ரீ லக்ஷ்மிதான், இருட்டு என்ற அறியாமையில் இருந்து வெளிவந்து வெளிச்சம் என்ற ஆத்ம ஒளியில் ஒன்றுவதே இந்நாளின் மிகமுக்கிய குறிக்கோளாகும். அதனால்தான் தீபாவளித் திருநாளில் தீபங்கள் ஏற்றி இருளை முழுவதுமாக அகற்றுகிறோம். விடியற்காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புதிய புத்தாடை அணிந்து, வெடி வைத்து கெட்டதை அழித்து, இனிப்பை உண்டு, பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் அனைவரும் ஒன்றாக கூடி அனந்தமாக ஆரம்பிக்கின்றோம்.
தெய்வீக உண்மைகளை உணர்ந்து, வாழ்க்கை வழிமுறைகளை கற்றுக்கொண்டே தொடர்ந்து ஆத்ம ஒளியின் கீழ் வாழ்பவர்களுக்கு என்றென்றும் ஆனந்தம் தொடரும். அனைவரும் விரும்பும் அஷ்ட ஐஸ்வர்யம், சௌபாக்கியம், ஆனந்தம் என்றும் நிலைத்திட குருஜி சத்திய பிரணவ யோகியார் அவர்கள் காட்டும் தெய்வீக வழிமுறையை கீழே தருகிறேன்.
ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய ஸர்வ மங்கள சௌபாக்கிய ஆரோக்கிய ஆனந்த லக்ஷ்மி சாதனா. இந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் தெய்வீக திருக்கோலத்தை, மாஹாமயி ஆத்ம வித்யா மந்திரில் தரிசிக்கலாம். அவள் முகம் கருணை சொரூபம். அன்பான கண்கள். நம்மை அரவணைக்கும் கைகள், நம் நிலையை அறிந்து அருளும் ஸ்ரீ சொரூபம். அம்மா தேவி மஹாமயி உங்கள் தெய்வீகத்துடன் ஒன்றாகும் உண்மை அன்பு நிலையை அருளுங்கள் அம்மா. என்றென்றும் உங்களை ஆத்மத்தில் உணரும் சக்தியை கொடுங்கள் அம்மா. குடும்ப மற்றும் சமூக வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ ஐஸ்வர்யங்கள் அருளுங்கள் அம்மா. எங்கள் உண்மை ஆத்ம நிலையில் என்றும் ஆனந்தமாக வாழ வரம் கொடுங்கள் அம்மா. இன்றிலிருந்து "ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய ஸர்வ மங்கள சௌபாக்கிய ஆரோக்கிய ஆனந்த லக்ஷ்மி சாதனாவை" தொடர்கிறேன் அம்மா, ஓம் ஸ்ரீ மஹாமயி ஸர்வாதம் இரட்ஷகி, நான் உன் சிறு குழந்தை. தெய்வீக தாயான உங்களை என்றென்றும் மறவாத நிலையை வரமாக கொடுத்து உங்கள் நிழலிலேயே வைத்து வழிகாட்டுங்கள் அம்மா.
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஆத்ம ஞான மந்த்ர சாதனா
ஸர்வ மங்கள மாங்கல்யே, சிவே ஸர்வாத்த ஸாதகே,
சரண்யே த்ரியம்பிகே தேவி நாராயணீ நமஸ்துதே.
ஓம்ஸ்ரீம்ஹ்ரீம் த்ரிசக்தியை நமஹ,
கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத!
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் அஷ்ட ஐஸ்வர்ய ப்ரதாயை,
அஷ்ட மங்கள தாயை, ஸர்வ சக்தி சித்தி தாயை,
ஸ்ரீ மஹாலக்ஷ்மியை நமோ நமஹ.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஸ்வாஹா.
ஸர்வ வித்யாம் தேஹி, ஸகல ஸம்பத் தேஹி,
ஆயுள் ஆரோக்கியம் தேஹி.
ஆனந்த ஸ்வரூபிண்யை ஸ்ரீமஹாலக்ஷ்மியை நமோ நமஹ.
ஓம் ஸ்ரீ மஹாமயி ஸர்வாத்ம இரட்ஷகி ஸ்வாஹா.
ஆத்ம ஞான பூஜா வழிமுறைகளை குருஜியிடம் பெறலாம்.
முப்பெரும் சக்திகளான ஸ்ரீ மஹாலக்ஷ்மி, ஸ்ரீ பார்வதி மற்றும் ஸ்ரீ ஸரஸ்வதி அனைவரும் ஒன்றாகி காட்சி தரும் தெய்வீகத் தாய் திருக்கோலமே ஓம் ஸ்ரீ மஹாமயி ஸர்வாத்ம இரக்ஷகி. இவளே ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய ஸர்வ மங்கள சௌபாக்கிய ஆரோக்கிய ஆனந்த லக்ஷ்மி ஸ்வரூபத்தில் அனைவரையும் காத்து வருகிறாள். இவளிடம் முழுமையாக சரண் அடைந்து ஆத்ம ஹோம பூஜா மந்த்ரங்களுடன் தொடர்ந்து தியானம் செய்பவர்கள் நிச்சயம் தெய்வீக குழந்தையாக மாறுவது நிஜமே! உலகை ஆளும் ஜகன் மாதாவின் குழந்தைகள் வாழ்க்கையில் ஸர்வ சக்திகளும் நிறைந்து ஆனந்தம் மேலோங்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா! இந்த சாதனையை தொடரும் பிரபஞ்சத் தாயின் குழந்தைகள் வாழ்க்கையில் படிப்பு, பழக்கம், வேலை, குடும்ப வாழ்க்கை, உறவு முறை, சமூக வாழ்க்கை, தெய்வீக வாழ்க்கை அனைத்திலும் வெற்றிப் பெற்று ஆனந்தமாக வாழ்வார்கள் என்று குருஜி சத்தியப் பிரணவ யோகியார் ஆசிர்வதித்தார்.
மேலும் ஓம் மஹாமயி ஸர்வசக்தி ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் முழு அருள் பெறும் தெய்வீக வழிமுறைகளை, சாதனா தீட்சையாகப் பெற்று உய்ய குருஜி சத்தியப் பிரணவ யோகியார் அவர்களை PH: 81446 45675ல் தொடர்புக் கொண்டு ஆத்ம வித்யா மந்திரில் சந்திக்கலாம்.
லக்ஷ்மி கடாக்ஷம், மங்களம், சுபிக்ஷம், சம்பூர்ணம், சுபம்.
Email: [email protected]
ஆனால் இந்த தீபாவளித் திருநாள் மிகவும் சக்தி வாய்ந்த தினமாக அமைந்ததற்கு மிக முக்கிய காரணம் இருக்கிறது. ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பிறந்த நாள் தீபாவளித் திருநாள் ஆகும். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலிலே அமிர்தத்திற்காக மேரு மலையை வைத்து கடைந்துக் கொண்டிருந்தார்கள். கார்த்திகை மாதம் அமாவாசை நன்நாளில் பாற்கடலில் இருந்து ஸ்ரீ லக்ஷ்மி தேவி ஸர்வசக்தி மயியாக வெளிவந்து, இந்த பிரபஞ்சத்தையே காக்கும் தொழில் கொண்ட ஸ்ரீமந் நாராயணனின் இதயத்தில் அமர்ந்தாள். அதனாலேயே பக்தர்கள் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நினைத்து ஆத்ம ரூபமாக பூஜை செய்தவுடன், கருணாமயியான அவள் ஸ்ரீமந் லக்ஷ்மி நாராயணனாக தோன்றி ஸகல சம்பத்துக்களையும் கொடுத்து காத்து இரட்சிக்கிறாள்.
தீபாவளித் திருநாள் தீப ஒளி நாளாகவும் கொண்டாடப்படுகிறது. தீபம் என்றாலே ஸ்ரீ லக்ஷ்மிதான், இருட்டு என்ற அறியாமையில் இருந்து வெளிவந்து வெளிச்சம் என்ற ஆத்ம ஒளியில் ஒன்றுவதே இந்நாளின் மிகமுக்கிய குறிக்கோளாகும். அதனால்தான் தீபாவளித் திருநாளில் தீபங்கள் ஏற்றி இருளை முழுவதுமாக அகற்றுகிறோம். விடியற்காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புதிய புத்தாடை அணிந்து, வெடி வைத்து கெட்டதை அழித்து, இனிப்பை உண்டு, பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் அனைவரும் ஒன்றாக கூடி அனந்தமாக ஆரம்பிக்கின்றோம்.
தெய்வீக உண்மைகளை உணர்ந்து, வாழ்க்கை வழிமுறைகளை கற்றுக்கொண்டே தொடர்ந்து ஆத்ம ஒளியின் கீழ் வாழ்பவர்களுக்கு என்றென்றும் ஆனந்தம் தொடரும். அனைவரும் விரும்பும் அஷ்ட ஐஸ்வர்யம், சௌபாக்கியம், ஆனந்தம் என்றும் நிலைத்திட குருஜி சத்திய பிரணவ யோகியார் அவர்கள் காட்டும் தெய்வீக வழிமுறையை கீழே தருகிறேன்.
ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய ஸர்வ மங்கள சௌபாக்கிய ஆரோக்கிய ஆனந்த லக்ஷ்மி சாதனா. இந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் தெய்வீக திருக்கோலத்தை, மாஹாமயி ஆத்ம வித்யா மந்திரில் தரிசிக்கலாம். அவள் முகம் கருணை சொரூபம். அன்பான கண்கள். நம்மை அரவணைக்கும் கைகள், நம் நிலையை அறிந்து அருளும் ஸ்ரீ சொரூபம். அம்மா தேவி மஹாமயி உங்கள் தெய்வீகத்துடன் ஒன்றாகும் உண்மை அன்பு நிலையை அருளுங்கள் அம்மா. என்றென்றும் உங்களை ஆத்மத்தில் உணரும் சக்தியை கொடுங்கள் அம்மா. குடும்ப மற்றும் சமூக வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ ஐஸ்வர்யங்கள் அருளுங்கள் அம்மா. எங்கள் உண்மை ஆத்ம நிலையில் என்றும் ஆனந்தமாக வாழ வரம் கொடுங்கள் அம்மா. இன்றிலிருந்து "ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய ஸர்வ மங்கள சௌபாக்கிய ஆரோக்கிய ஆனந்த லக்ஷ்மி சாதனாவை" தொடர்கிறேன் அம்மா, ஓம் ஸ்ரீ மஹாமயி ஸர்வாதம் இரட்ஷகி, நான் உன் சிறு குழந்தை. தெய்வீக தாயான உங்களை என்றென்றும் மறவாத நிலையை வரமாக கொடுத்து உங்கள் நிழலிலேயே வைத்து வழிகாட்டுங்கள் அம்மா.
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஆத்ம ஞான மந்த்ர சாதனா
ஸர்வ மங்கள மாங்கல்யே, சிவே ஸர்வாத்த ஸாதகே,
சரண்யே த்ரியம்பிகே தேவி நாராயணீ நமஸ்துதே.
ஓம்ஸ்ரீம்ஹ்ரீம் த்ரிசக்தியை நமஹ,
கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத!
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் அஷ்ட ஐஸ்வர்ய ப்ரதாயை,
அஷ்ட மங்கள தாயை, ஸர்வ சக்தி சித்தி தாயை,
ஸ்ரீ மஹாலக்ஷ்மியை நமோ நமஹ.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஸ்வாஹா.
ஸர்வ வித்யாம் தேஹி, ஸகல ஸம்பத் தேஹி,
ஆயுள் ஆரோக்கியம் தேஹி.
ஆனந்த ஸ்வரூபிண்யை ஸ்ரீமஹாலக்ஷ்மியை நமோ நமஹ.
ஓம் ஸ்ரீ மஹாமயி ஸர்வாத்ம இரட்ஷகி ஸ்வாஹா.
ஆத்ம ஞான பூஜா வழிமுறைகளை குருஜியிடம் பெறலாம்.
முப்பெரும் சக்திகளான ஸ்ரீ மஹாலக்ஷ்மி, ஸ்ரீ பார்வதி மற்றும் ஸ்ரீ ஸரஸ்வதி அனைவரும் ஒன்றாகி காட்சி தரும் தெய்வீகத் தாய் திருக்கோலமே ஓம் ஸ்ரீ மஹாமயி ஸர்வாத்ம இரக்ஷகி. இவளே ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய ஸர்வ மங்கள சௌபாக்கிய ஆரோக்கிய ஆனந்த லக்ஷ்மி ஸ்வரூபத்தில் அனைவரையும் காத்து வருகிறாள். இவளிடம் முழுமையாக சரண் அடைந்து ஆத்ம ஹோம பூஜா மந்த்ரங்களுடன் தொடர்ந்து தியானம் செய்பவர்கள் நிச்சயம் தெய்வீக குழந்தையாக மாறுவது நிஜமே! உலகை ஆளும் ஜகன் மாதாவின் குழந்தைகள் வாழ்க்கையில் ஸர்வ சக்திகளும் நிறைந்து ஆனந்தம் மேலோங்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா! இந்த சாதனையை தொடரும் பிரபஞ்சத் தாயின் குழந்தைகள் வாழ்க்கையில் படிப்பு, பழக்கம், வேலை, குடும்ப வாழ்க்கை, உறவு முறை, சமூக வாழ்க்கை, தெய்வீக வாழ்க்கை அனைத்திலும் வெற்றிப் பெற்று ஆனந்தமாக வாழ்வார்கள் என்று குருஜி சத்தியப் பிரணவ யோகியார் ஆசிர்வதித்தார்.
மேலும் ஓம் மஹாமயி ஸர்வசக்தி ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் முழு அருள் பெறும் தெய்வீக வழிமுறைகளை, சாதனா தீட்சையாகப் பெற்று உய்ய குருஜி சத்தியப் பிரணவ யோகியார் அவர்களை PH: 81446 45675ல் தொடர்புக் கொண்டு ஆத்ம வித்யா மந்திரில் சந்திக்கலாம்.
லக்ஷ்மி கடாக்ஷம், மங்களம், சுபிக்ஷம், சம்பூர்ணம், சுபம்.
Email: [email protected]