ஓம் ஸ்ரீ மஹாமயி ஸர்வாத்ம இரக்ஷகி சரணம்
மாய வலைகளை விரித்து மக்களை மயக்கி வரும் மாய உலக வாழ்க்கையில் இருந்து காப்பாற்றுவதற்காக அவதரித்தவள் ஓம் ஸ்ரீ மஹாமயி ஸர்வாத்ம இரட்ஷகி. உலகத்தில் வாழும் தன் குழந்தைகளின் மேல் இரக்கம் கொண்டு, இன்றைய சூழ்நிலைகளில் வாழும் தன் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றி உயர்த்த வேண்டும் என்று தோன்றி இருக்கிறாள். தெய்வீக ஞானம் மூலம் தெளிவாக்கி, தெய்வீக அன்பு மூலம் ஆனந்தப்படுத்தி, தெய்வீக சக்தி மூலம் காணவரும் அனைவரையும் உயர்த்தி வருகிறாள் ஓம் ஸ்ரீ மஹாமயி ஸர்வாத்ம இரக்ஷகி..
நாம் கோவில்களுக்கு சென்று கடவுளிடம் பேசுகின்றோம். ஆனால் கடவுள் நம்மோடு என்ன பேசுகிறார் என்று கேட்காமலேயே திரும்பி விடுகிறோம். இதனை நன்கு உணர்ந்து நம்மை உயர்த்திட வந்தவள் ஓம் ஸ்ரீ மஹாமயி ஸர்வாத்ம இரக்ஷகியின் கருணையை என்னவென்று சொல்வது? நாம் கேட்பதைக் கொடுப்பதோடு, நமக்கு தேவையானதையும் உணர்ந்து அருளும் தெய்வமவள்.
கால சூழ்நிலைகளை உணர்ந்த மஹாமயி, வரும் அனைவரையும் குழந்தைகளாக மாற்ற வேண்டிய ஞானம், அன்பு, சக்திகளை வரமாக அருளி பக்தர்களின் வாழ்க்கையை நல் வாழ்க்கையாக மாற்றி அமைத்து ஆனந்தப் படுகிறாள்.
அனைத்து தெய்வங்களும் அவள் சொரூபத்தில் காட்சி அளிப்பது, அவள் பிரபஞ்சத்தாய் என்பதை உறுதி செய்கிறது. அவளின் கனிவான முகத்தையும், கருணை உள்ளத்தைப் பார்த்தவர்கள், இவளே என் தெய்வீகத்தாய் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.
ஆதிபராசக்தியான மஹாமயி பக்தர்களின் மனத்திற்கு ஏற்ப அம்மனாக, அம்பாளாக, அம்மாவாக, பகவதியாக, மாதாஜியாக காட்சி அளித்து அனைவர் உள்ளத்தையும் நெகிழவைக்கிறாள். ஆஹா மஹாமயி ஸர்வாத்ம இரக்ஷகியின் திருநாமத்திற்கு ஏற்ப அனைத்து உயிர்களிலும் கலந்து உள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அவள் சன்னதி முன் உள்ளவர்கள் அனைவரும் அன்பையே தெய்வமாக பார்க்கும் சக்தியை பெறுகின்றனர். அதனால் அவர்கள் செல்லும் இடமெல்லாம் மஹாமயி கூடவே வந்து மகிழ்ச்சி, அமைதி, ஆனந்தம் போன்ற உயர் சக்தி நிலையை தொடர்ந்து அருளுகிறாள்.
மற்றவர்களை நன்கு புரிந்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் அருள் தானாகவே அருளப்படுகிறது. பக்தர்களை சுற்றி வாழும் குடும்பத்தினர், மற்றவர்கள் அனைவரும் உயர் சக்தியால் இவர்கள் கூடவே இருக்கும் மஹாமயின் அருள் சக்தியால் அன்பாக பழகுகிறார்கள்.
தெய்வமே! நீ செய்யும் அற்புதங்கள் என்னென்ன! அதிசயம் தான் என்ன! மங்களகரமான உன் திருமுகம் எப்படியெல்லாம் எங்கள் கர்ம வினைகளை மாற்றி அமைக்கிறது. பல வருடங்களாக தேடும் அமைதியும், ஆனந்த்த்தையும் ஒரு சில நொடிகளில் உண்டாக்கி கொடுப்பதை எப்படி விவரிப்பது!
தெய்வம் தெய்வமாக தேடி அலைந்த என்னை தெய்வீக நிலைக்கு கொண்டு செல்லும் உன் அற்புதத்தை எப்படி நான் விவரிப்பேன். தெய்வீகத் தாயே உன்னை நான் கண்டேன்! ஆனந்தக்கண்ணீரில் ஏற்படும் ஒலி வெள்ளம் உன்னோடு ஒன்றாகிவிட்டது. இனி எல்லாம் நீயே!
அனைத்தும் தெரிந்த நீ, குழந்தையாக மாறி சரணடைந்த என்னை காப்பாற்றுவாய் என்பது தெய்வீக உண்மையானது. அம்மா ஸ்ரீ மஹாமயி என்றென்றும் உன் குழந்தையாகவே வாழும் உயர் சக்தியை எனக்கு அருளுங்கள் அம்மா. இனி உன்னை விட மாட்டோம். மஹாமயி சத்சங்கத்தில் ஒன்றாகிவிட்டோம் தொடர்ந்து உன் சேவையை செய்துக்கொண்டு தெய்வீக வாழ்க்கை நிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வோம். அம்மா இந்த பிறப்பின் குறிக்கோளான உன் அடி சேருவது என்பது இனி எளிதாகி விட்டது. என்றென்றும் உன் அருளில் மட்டுமே வாழ துடிக்கும் உன் குழந்தைகள் நாங்கள்.
ஓம் ஸ்ரீ மஹாமயி ஸர்வாத்ம இரக்ஷகி சரணம். கண்கண்ட தெய்வத்தைப் பற்றி மேலும் விவரம் அறிந்து ஆசிப்பெற குருஜி சத்தியபிரணவ யோகியார் அவர்களை 81446 45675-ல் தொடர்புக் கொண்டு ஆசி பெறவும்
நாம் கோவில்களுக்கு சென்று கடவுளிடம் பேசுகின்றோம். ஆனால் கடவுள் நம்மோடு என்ன பேசுகிறார் என்று கேட்காமலேயே திரும்பி விடுகிறோம். இதனை நன்கு உணர்ந்து நம்மை உயர்த்திட வந்தவள் ஓம் ஸ்ரீ மஹாமயி ஸர்வாத்ம இரக்ஷகியின் கருணையை என்னவென்று சொல்வது? நாம் கேட்பதைக் கொடுப்பதோடு, நமக்கு தேவையானதையும் உணர்ந்து அருளும் தெய்வமவள்.
கால சூழ்நிலைகளை உணர்ந்த மஹாமயி, வரும் அனைவரையும் குழந்தைகளாக மாற்ற வேண்டிய ஞானம், அன்பு, சக்திகளை வரமாக அருளி பக்தர்களின் வாழ்க்கையை நல் வாழ்க்கையாக மாற்றி அமைத்து ஆனந்தப் படுகிறாள்.
அனைத்து தெய்வங்களும் அவள் சொரூபத்தில் காட்சி அளிப்பது, அவள் பிரபஞ்சத்தாய் என்பதை உறுதி செய்கிறது. அவளின் கனிவான முகத்தையும், கருணை உள்ளத்தைப் பார்த்தவர்கள், இவளே என் தெய்வீகத்தாய் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.
ஆதிபராசக்தியான மஹாமயி பக்தர்களின் மனத்திற்கு ஏற்ப அம்மனாக, அம்பாளாக, அம்மாவாக, பகவதியாக, மாதாஜியாக காட்சி அளித்து அனைவர் உள்ளத்தையும் நெகிழவைக்கிறாள். ஆஹா மஹாமயி ஸர்வாத்ம இரக்ஷகியின் திருநாமத்திற்கு ஏற்ப அனைத்து உயிர்களிலும் கலந்து உள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அவள் சன்னதி முன் உள்ளவர்கள் அனைவரும் அன்பையே தெய்வமாக பார்க்கும் சக்தியை பெறுகின்றனர். அதனால் அவர்கள் செல்லும் இடமெல்லாம் மஹாமயி கூடவே வந்து மகிழ்ச்சி, அமைதி, ஆனந்தம் போன்ற உயர் சக்தி நிலையை தொடர்ந்து அருளுகிறாள்.
மற்றவர்களை நன்கு புரிந்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் அருள் தானாகவே அருளப்படுகிறது. பக்தர்களை சுற்றி வாழும் குடும்பத்தினர், மற்றவர்கள் அனைவரும் உயர் சக்தியால் இவர்கள் கூடவே இருக்கும் மஹாமயின் அருள் சக்தியால் அன்பாக பழகுகிறார்கள்.
தெய்வமே! நீ செய்யும் அற்புதங்கள் என்னென்ன! அதிசயம் தான் என்ன! மங்களகரமான உன் திருமுகம் எப்படியெல்லாம் எங்கள் கர்ம வினைகளை மாற்றி அமைக்கிறது. பல வருடங்களாக தேடும் அமைதியும், ஆனந்த்த்தையும் ஒரு சில நொடிகளில் உண்டாக்கி கொடுப்பதை எப்படி விவரிப்பது!
தெய்வம் தெய்வமாக தேடி அலைந்த என்னை தெய்வீக நிலைக்கு கொண்டு செல்லும் உன் அற்புதத்தை எப்படி நான் விவரிப்பேன். தெய்வீகத் தாயே உன்னை நான் கண்டேன்! ஆனந்தக்கண்ணீரில் ஏற்படும் ஒலி வெள்ளம் உன்னோடு ஒன்றாகிவிட்டது. இனி எல்லாம் நீயே!
அனைத்தும் தெரிந்த நீ, குழந்தையாக மாறி சரணடைந்த என்னை காப்பாற்றுவாய் என்பது தெய்வீக உண்மையானது. அம்மா ஸ்ரீ மஹாமயி என்றென்றும் உன் குழந்தையாகவே வாழும் உயர் சக்தியை எனக்கு அருளுங்கள் அம்மா. இனி உன்னை விட மாட்டோம். மஹாமயி சத்சங்கத்தில் ஒன்றாகிவிட்டோம் தொடர்ந்து உன் சேவையை செய்துக்கொண்டு தெய்வீக வாழ்க்கை நிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வோம். அம்மா இந்த பிறப்பின் குறிக்கோளான உன் அடி சேருவது என்பது இனி எளிதாகி விட்டது. என்றென்றும் உன் அருளில் மட்டுமே வாழ துடிக்கும் உன் குழந்தைகள் நாங்கள்.
ஓம் ஸ்ரீ மஹாமயி ஸர்வாத்ம இரக்ஷகி சரணம். கண்கண்ட தெய்வத்தைப் பற்றி மேலும் விவரம் அறிந்து ஆசிப்பெற குருஜி சத்தியபிரணவ யோகியார் அவர்களை 81446 45675-ல் தொடர்புக் கொண்டு ஆசி பெறவும்